districts

ரூ.180 கோடி போதைப் பொருள் கடத்தல்: 3 பேர் கைது!

மதுரை, மார்ச் 4-  ரூ. 180 கோடி மதிப்பிலான 30 கிலோ போதைப்பொருளைக் கடத்திய வழக்கில் பிள்ளமன் பிரகாஷ் மனைவி மோனிஷா ஷீலா (35), அவருக்கு உதவி யாக இருந்த ஜேசுதாஸ் ஆகி யோருக்கு 15 நாட்கள் நீதிமன்றக்  காவல் வழங்கப்பட்டுள்ளது. 

மத்திய வருவாய் பிரிவின் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, பிள்ளமன் பிர காஷ் என்பவரை அதிகாரிகள் தில்லியிலிருந்து பின்தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில்,  சென்னையில் இருந்து செங் கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை  எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய பிள்ள மன் பிரகாஷ், மதுரை ரயில்  நிலையத்தில் இறங்க முற்பட்ட போது, அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது, சுமார் ரூ. 180  கோடி மதிப்பிலான 30 கிலோ  மதிப்பிலான மெத்தபெட்ட மைன் வகை போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில், சென்னை கொடுங்கையூரில் உள்ள அவரது வீட்டிலிருந்தும் 6 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக, பிள்ளமன்  பிரகாஷ் அவரது மனைவி மோனிஷா ஷீலா, இவர்களுக்கு  உடந்தையாக இருந்த ஜேசு தாஸ் ஆகியோர் கைது செய் யப்பட்டனர். இவர்கள் மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2017 முதல் குஜராத் மாநிலம் கொக்கெய்ன், ஹெரா யின் உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் பேர்வழிகளின்  சொர்க்கமாகத் திகழ்கிறது. இங்குள்ள துறைமுகங்களில் ஒவ்வொரு முறையும் வந்தி றங்கும் பல ஆயிரம் கிலோ  ஹெராயின் போதைப் பொருட்  கள், பல்வேறு மாநிலங்களுக் கும் சப்ளையாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.