districts

img

மதுரையில் 16-வது புத்தக திருவிழா துவங்கியது

மதுரை, அக்.12- மதுரை மாவட்ட ‘‘புத்தக திருவிழா  2023’’ ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமை யில் வியாழனன்று துவங்கியது. புத்தக திரு விழாவை தகவல் தொழில்நுட்ப டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சர் முனைவர் பழனி வேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.  மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பப்பாசி தலைவர் வைரவன் வரவேற்றார்.  நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர்  தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, மாவட்ட வருவாய்த்துறை  அதிகாரி சரவணன், கூடுதல் ஆட்சியர் டாக்  டர் மோனிகா ராணா உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர். தொடர்ந்து பள்ளி  மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. பாரதி புத்தகாலய கடை எண் 58, 59-ல் இயங்கி வருகிறது.