திண்டுக்கல் நேருஜி நகரில் டாக்டர் லட்சுமிநேத்ராவதி 15-வது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அவரது கணவர் மரு.கு.இராஜேஸ்வரன், மகன் மரு.இரா.அமுதநிலவன், அடியனூத்து ஊராட்சித் தலைவர் அ.ஜீவானந்தம், மாதர் சங்க மாநிலச் செயலாளர் ஜி.இராணி, மாவட்டச் செயலாளர் வே.பாப்பாத்தி, மாவட்டத் துணைத்தலைவர் எஸ்.எம்.பழனியம்மாள், வேலு, ராஜி ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். டாக்டர் லட்சுமி நேத்ராவதி, கம்யூனிஸ்ட் இயக்க முதுபெரும் தலைவர்கள் ஆர்.உமாநாத், பாப்பா உமாநாத் ஆகியோரின் மூத்த மகள் ஆவார்.