districts

img

தோழர் ஜே.ஹேமச்சந்திரன்  15-ஆவது நினைவுதினம்

ஓய்வறியா போராளி தோழர் .ஜே.ஹேமச்சந்திரன் அவர்களின் 15-ஆவது நினைவுதினத்தையொட்டி அருமனை சந்திப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  


இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மேல்புறம் வட்டாரம் செம்மண் காலையில்  தோழர் ஜே.ஹேமச்சந்திரன்  உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கஞ்சி காய்ச்சி பொதுமக்களுக்கும் தோழர்களுக்கும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர் லீமாறோஸ் மருதங்கோடு ஊராட்சி தலைவர் ஆர். ராஜேந்திரன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட் , மாவட்ட நிர்வாகி ரமேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.