districts

img

பல்கலைக்கழக நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட 136 ஊழியர்கள் தொடர் போராட்டம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட 136 ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். தொடர் தர்ணா நடத்த திட்டமிட்ட நிலையில் ஜூன் 1 அன்று ஜனநாயக முறையிலான போராட்டத்தை ஒடுக்கும் வகையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் க.நீதிராஜா, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் எஸ்.பாலமுருகன், உசிலம்பட்டி வட்டக்கிளை தலைவர் பி.அய்யங்காளை ஆகியோரை மிரட்டும் வகையில் நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.