மகாகவி பாரதியாரின் 141 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு டிசம்பர் 11 ஞாயிறன்று மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் கா. இளங்கோவன் தலைமையில் மாலை அணிவித்து புகழ் பாமாலை சூட்டப்பட்டது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் சிறப்புரையாற்றினார். அனுப்பானடி சிறுமி தீ. கு. சங்கமித்ரா பாரதி குறித்து உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மதுரை நம்பி, யமுனா சரவணக்குமார் , முனைவர் சாந்தி செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.