districts

img

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: விருதுநகர் ஆட்சியர் ஆய்வு

விருதுநகர், மார்ச் 26- 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை வட்டம் பாலவநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு  செய்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு  மார்ச் 26 தொடங்கி ஏப்ரல் 8 வரை நடை பெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 114 தேர்வு மையங்களில் 10,908 மாண வர்களும், 11,097 மாணவியர்களும் என  மொத்தம் 22,005 பள்ளி மாணவ, மாணவி யர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில், 277 மாற்றுத்திறனாளி மாண வர்கள் தேர்வு எழு தரைத் தளத்தில்  தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. உடல் ஊனமுற்றோர், கண் பார்  வையற்றோர், காது கேளாத வாய் பேச இய லாதார், டிஸ்லெக்சியா மற்றும் மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடு தல் நேரம் ஒதுக்கியும், சொல்வதை எழுது வதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி சென்று வர கூடுதல் பேருந்துகள் இயக்கப்  பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இத்தேர்வு மையங்களில் 119 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 119 துறை அலுவலர்கள், 1809 அறைக்; கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை அலுவலர் களைக் கொண்டு 6 சிறப்பு பறக்கும் படை  குழுவில் 12 உறுப்பினர்கள் மற்றும் தேர்வு  மையங்களில் 157 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்’’ என தெரிவித்தார்.