districts

img

மதுரையில் வணிகவரித்துறை வாகன சோதனையின்போது 1000 கிலோ கஞ்சா பறிமுதல்

மதுரையில் வணிகவரித்துறை வாகன சோதனையின்போது 1000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மண்டல வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு சார்பாக மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டியூர் அருகே வாகன சோதனையில் இருந்தபோது நிற்காமல் சென்ற மினி வேனை ஐந்து கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்த வணிக வரித்துறை அதிகாரிகள் வாகனத்தை சோதனை செய்த போது வாகனத்தில் சுமார் 1000 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து மினி வேனை பறிமுதல் செய்த வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவினர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர், காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விசாகபட்டினத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட தெரியவந்தது அதனைத் தொடர்ந்து 1000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த காவல்துறையினர் ஓட்டுநர் பிரகாஷ் என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்,

வணிகவரித்துறை வாகன சோதனையில் 1000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.