districts

img

மேலூர் நகராட்சி வார்டுகளில் சு.வெங்கடேசன் எம்.பி., மக்கள் சந்திப்பு

மதுரை, ஜூலை 11-  மதுரை மாவட்டம் மேலூர் நக ராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 27 வார்டு களுக்கான மக்கள் சந்திப்பு மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் மேலூர் மூவேந்தர் பண்பாட்டு கழக  மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமை வகித்தார். உடனடியாக தீர்க்க முடிந்த கோரிக்கை களுக்கு தீர்வுகண்டார்.  10 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.2000 மதிப்பிலான உபகாரணங்கள்அடங் கிய தொகுப்பு கூடையை சு.வெங்க டேசன் எம்.பி., வழங்கினார்.

மாற்றுத்திறனாளிக்கு  உடனே வாகனம் 

மேலூர் தாலுகா வண்ணாம்பாறை பட்டியை சேர்ந்த எஸ்.கணேசன் எனும் தவழும் மாற்றுத்திறனாளி மூன்று சக் கர வாகனம் கேட்டு மனு அளிக்க வந்தார். முகாமில் அவர் இருந்த இடத்திற்கே சென்ற சு.வெங்கடேசன் எம்.பி., மாற்றுத்திறனாளி அருகே அமர்ந்து கோரிக்கையை கேட்டார். உடனடியாக அதிகாரிகளை அழைத்து மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கி உதவினார். மேலும் தொழில் துறை அதிகாரிகளிடம் பேசி ஏதேனும் ஒரு வேலை ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.  மேலூர் தாலுகா கீரானூர் கிரா மத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி என்ற மாற்றுத்திறனாளிக்கு கைரேகை பதி வாகாத காரணத்தினால் ஆதார் அட்டை  இல்லை. இதனால் மாற்றுத்திற னாளிக்கு கிடைக்கக்கூடிய எந்தவித சலுகையும் கிடைக்காமல் 15 வரு டங்களாக வாழ்ந்து வருகிறார். இவர்  தனக்கு உதவித்தொகை உள்ளிட்ட சலு கைகள் வழங்கிடக் கோரி மனு அளித்  தார். உடனடியாக வட்டாட்சியர் மற்றும்  துறை அதிகாரிகளை அழைத்து, ஆதார்  அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென சு.வெங்கடேசன் எம்.பி.,  கேட்டுக்கொண்டார். ஒரு மாததிற்குகள் அவருக்கு மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்து தகவல் தெரிவிக்க வேண்டு மென கேட்டுக்கொண்டார். மேலும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக்கருவி, மற்றும் மூன்று சக்கர  சைக்கிள் வழங்கப்பட்டன.

100 பேருக்கு இலவச பட்டா 

மேலூர் தாலுகா அ.வல்லாளபட்டி பேரூராட்சியில் கடந்த 7 ஆம் தேதி  நடைபெற்ற முகாமில் இலவச வீட்டு  மனைப்பட்டா மற்றும் பட்டா கேட்டு ஏரா ளமானோர் மனு அளித்தனர். அன்று வட்டாட்சியர் , முதலமைச்சர் தலைமை யில் நடைபெற்ற காணொலிக்கூட்டத் திற்கு சென்ற காரணத்தினால் பட்டா வழங்க முடியவில்லை. எனவே அவர்  களுக்கு ஜூலை 11 அன்று நடை பெற்ற முகாமில் இலவச பட்டாக்களை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் மற்றும் அதிகாரிகள் வழங்கி னர். மேலும் பதினெட்டாங்குடி, தெற்கு தெரு ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச  வீட்டு மனை பட்டா மற்றும் இடப்பட்டா  வழங்கப்பட்டது.

மருத்துவ சிகிச்சைக்கு உதவி

மேலூர் தாலுகா கேசம்பட்டி ஊராட்சி அருக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜீவானந்தம் என்பவருக்கு கழுத்து தண்டு வடத்திற்கு இடையில் கட்டி உள்ளது. அதனை அகற்ற ரூ. 3  லட்சம் வரை செலவாகும்.இதற்கு உதவி செய்யக்கோரி மனு அளித்தார். உடனடியாக எம். பி மருத்துவ துறை அதிகாரிகளை அழைத்து விபரம் கேட்டறிந்து. கட்டியை அகற்ற ஏற்  பாடு செய்ய வேண்டுமென கேட்டுக்  கொண்டார். அதற்கு மருத்துவ துறை அதிகாரிகள், 2 நாட்களில் அவருக்கு எந்தவித செல்வுமின்றி அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவ வசதிகளுக்கு கட்டணமின்றி சிகிச்சை செய்வதாகக் கூறி அதற்கான  சிபாரிசு கடித்தினையும் வழங்கினர். மனு அளித்த உடனே உதவி செய்த எம்.பி.க்கு கண்கலங்கிய நிலை யில் நன்றி கூறினார் ஜீவானந்தம்.

கவுன்சிலர்கள் மனு

1முதல் 27 வார்டுகளுக்கு உட்பட்ட மக்கள் மற்றும் கவுன்சிலர்கள் அடிப் படை வசதிகள் கோரி மனு அளித்தனர். அந்தந்த துறை அதிகாரிகளை அழைத்து கோரிக்கை மனு குறித்து பரிசீலனை செய்து நிறைவேற்றும்படி கேட்டுக்கொண்டார்.

மார்க்கெட் வியாபாரிகள் மனு 

மேலூர் தினசரி மார்க்கெட்க்கு புதிய கடைகள் கட்டும் பணி கடந்த ஓராண்டுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்றும்  தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படு வது குறித்தம் மனு அளித்தனர்.  நகராட்சி நிர்வாகத்திடம் பேசி புதிய  கடை கட்டும் பணியினை விரைவில் முடிக்க வலியுறுத்துவதாக எம்.பி.கூறி னார். இந்த மக்கள் சந்திப்பு முகாமில் நகராட்சி தலைவர் (சேர்மன்) யூ.முக மது யாசின், நகராட்சி மண்டல நிர்வாக  இயக்குநர் கா.சரவணன், நகராட்சி ஆணையாளர் ஆறுமுகம், பொறி யாளர் பட்டுராஜன், வட்டாட்சியர் செந்  தாமரை, மற்றும் போக்குவரத்து துறை,  மின்சார துறை, கல்வி துறை, சுகா தார துறை, வேளாண்துறை, உள்ளிட்ட  19 அரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு  உறுப்பினர் எஸ்.பாலா, தாலுகாச் செய லாளர் எம்.கண்ணன், தாலுகாக் குழு உறுப்பினர்கள் வீ.அடக்கிவிரணன், எஸ். பி.மணவாளன், அடைக்கன், பி.எஸ்.ராஜாமணி, ஆனந்த், தன சேகரன், சி.எஸ்.மணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு லட்சம் மக்களை சந்தித்துள்ளோம்: சு.வெங்கடேசன் எம்.பி.,

நிறைவு செய்து வைத்து சு.வெங்கடேசன் பேசுகையில், கடந்த ஆண்டு  ஜூன் மாதம் மேலூர் தும்பைப் பட்டியில் இந்த மக்கள் சந்திப்பு இயக்கம்  தொடங்கப் பட்டு, கடந்த 14 மாதங்களில் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி,  2 பேரூராட்சி மற்றும் 123 ஊராட்சிகளில் மக்கள் சந்திப்பு நடை பெற்றுள்ளது. இறுதியாக மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட மக்களின் சந்திப்பு  தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமான மக்களை சந்தித்து அவர்களின் குறைகள் குறித்து மனுக்கள் பெற்று, 20 துறை சார்ந்த அதிகாரிகள் உதவியுடன் பல ஆயிரம் மனுக்களுக்கு உடனடி தீர்வும் காணப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.  மகளிர் உரிமை தொகை குறித்த கேள்விக்கு, கலைஞர் மகளிர் உரி மைத்தொகை திட்டம் அடித்தட்டு மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை உரு வாக்குகின்ற திட்டமாக உள்ளது. இதுவரை மக்கள் சந்திப்பு முகாம் மூலம்  ஒரு லட்சம் மக்களை சந்தித்துள்ளேன். அதில் பெரும்பான்மையாக உத வித்தொகை கேட்டு மனுக்கள் வரப்படுகிறது. 40 வயதுக்கு உட்பட்ட விதவை  மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இத்திட்டம் பெரும் பயன் உள்ளதாக அமைய உள்ளது. இத்திட்டம் பற்றி நூறு பேர் நூறு விதமாக விமர்சனம் செய்ய லாம். ஆனால் இதைவிட மக்களுக்கு பயன் அளிக்கிற திட்டம் இருக்கப் போவதில்லை. அதனால் இது மிகுந்த வரவேற்புக்கு உகந்த திட்டம் என்று  தெரிவித்தார்.  மாற்றுத்திறனாளிக்கு உரிமை தொகை குறித்து கேள்விக்கு பதில ளிக்கையில், ஒன்றிய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 11 வருடங்களாக  ரூ. 300 மட்டுமே மானியமாக கொடுத்து வருகிறது. ஆனால் தமிழக அரசு அவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மிக  அதிகமான நிதி ஒதுக்கிய அரசாக தமிழக அரசு உள்ளது என்று சு.வெங்க டேசன் எம்.பி., தெரிவித்தார்.