திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடைபெறும் 100-நாள் வேலையில் செய்யப்படும் பணிகள், மனிதஆற்றல், செயல்பாடுகள் குறித்து வட்டார வளஅலுவலர் பாக்யராஜ் தலைமையில் ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்ட தணிக்கை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஞ்சவர்ணம்,அண்ணாதுரை முன்னிலைவகித்தனர்.