districts

img

‘தூய்மை திருநகர்’ விழிப்புணர்வு பேரணி மேயர் தொடங்கி வைத்தார்

மதுரை, அக்.6- நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட ‘தூய்மை திருநகர்’ விழிப்புணர்வு பேரணியை திருநகர் அண்ணா பூங்காவிலிருந்து மதுரை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணை யாளர் கே.ஜே.பிரவீன்குமார் ஆகியோர் வெள்ளியன்று தொடங்கி வைத்தனர்.  பேரணி அண்ணா நகர் பூங்காவில் தொடங்கப்பட்டு  திருநகர் 4-வது, 3வது, 2-வது பேருந்து நிறுத்தம் வழியாக அண்ணா பூங்காவிற்கு வந்தடைந்தது. பேரணியில் சுமார் 450 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.   மேலும் தூய்மைக்கான உறுதி மொழி யினை மேயர் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலர் கள், பொதுமக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.  மேலும் மண்டலம் 4-வது வார்டு எண்.44 புது மீனாட்சி நகர் சிமெண்ட் ரோடு பகுதியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப் பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.    நிகழ்வில், துணை மேயர் தி.நாக ராஜன். மண்டலத் தலைவர்கள் சுவிதா, முகேஷ்சர்மா, உதவி ஆணையாளர்கள் சுரேஷ்குமார், ஷாஜகான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.