districts

img

தனியாரால் ஊருக்காக தானம் வழங்கப்பட்ட இடம் பட்டா மாற்றி ஆக்கிரமிப்பு

பெரம்பலூர், பிப்.6- பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.கற்ப கம் தலைமையில் நடைபெற்றது.  இதில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பறவாய் கிராம மக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.செல்லதுரை தலைமையில் மனு ஒன்றை அளித்தனர்.  அம்மனுவில், ‘‘தங்களது கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் அருகே பெரு மாள் கோவில் முன்புறம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பங்காரு அம்மாள் மற்றும் சின்னசாமி ரெட்டியார் ஆகியோர் தானமாக இடம் வழங்கியுள்ளனர்.
பட்டா போட்டு  சர்வேயர் ஆக்கிரமிப்பு
இந்த இடத்தில் தான் வள்ளலார் மடம்,  அங்கன்வாடி பாலர் மையம், நூலகம் மற்றும் பொதுமக்கள் உபயோகிக்கும் ஆழ்  துளை கிணறு உள்ளது. சம்பந்தப்பட்ட இடத்தை அதே ஊரைச் சேர்ந்த பிச்சைப்  பிள்ளை மகன் மணி என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சர்வேயராக பணி புரிந்த காலத்தில் தனது பெயருக்கு மாற்றி  தற்போது தனது மகன் தாமரைசெல்வன் பெயருக்கு தானசெட்டில்மெண்ட் பத்திரம் எழுதி, ஆக்கிரப்பு செய்துள்ளார்.  இது சம்பந்தமாக கிராமசபை கூட்டத்தி லும், கிராம பஞ்சாயத்து கூட்டத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கி ரமிப்பை அகற்றி, அந்த இடத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்’’ என மனுவில் தெரிவித்திருந்தனர்.  மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.