பெரம்பலூர், சுமே 26- மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத் துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கி ணைப்புக் குழு சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி மே 26 அன்று பெரம்பலூர் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் ரெ.இராஜகுமாரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் டி.எஸ்.சம்பத், சி.கண்ணையன், டி.வேதமாணிக்கம், செ.சித்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொரு ளாளர் பி.கிருஷ்ணசாமி, அக்ரி.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் சி.தங்கராசு, பிஎஸ் என்எல் மு.கந்தசாமி, எம்.கருணாநிதி, சத்து ணவு ஓய்வூதியர் அமைப்பு வஸந்தி, எல்ஐசி இரா.மூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். மாநில துணைச் செயலாளர் இரா.சின்னசாமி விளக்கி பேசினார். சாலைப்போக்குவரத்து சு.சிவானந்தம், மின் ஊழியர் மத்திய அமைப்பு எஸ்.அகஸ்டின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிர்வாகக்குழு மு.விஜயேந்திரன் நன்றி கூறினார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஓய்வூதியர் சங்க ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவர் மு.முத்தையா தலைமை வகித்தார். என்.ராமச்சந்திரன் வர வேற்றார். பள்ளி, கல்லூரி ஓய்வுபெற்றோர் நல அமைப்புத் தலைவர் கே.ஜெயபாலன், போக்குவரத்து ஓய்வூதியர் சங்க நிர்வாகி கள் லோகநாதன், இளங்கோவன், மின்சா ரத்துறை-அரசுமுகம், பள்ளி கல்லூரி ஆசிரி யர் துறை-அ.மணவாளன், எல்ஐசி எம்.அசோகன் உள்ளிட்டோர் விளக்கி பேசினர். ஆர்.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
திருச்சி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தீரன் சின்னமலை அலுவலம் முன்பு நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிராஜூதீன் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலஅமைப்பு மாநில துணைப் பொதுச்செயலாளர் சண்முகம், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் செந்தமிழ்செல்வன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைத் தலைவர் பஷிர், ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க மாநில உதவி பொதுச்செயலாளர் செல்வன், பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் தேவராஜ் ஆகி யோர் பேசினர். போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டப் பொரு ளாளர் நடராஜன் நன்றி கூறினார்.
கரூர்
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் ஓய்வூதியர் சங்க கரூர் மாவட்டச் செயலாளர் சாமுவேல் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். விஸ்வநாதன் (அஞ்சல் துறை), ராஜமாணிக்கம் (போக்குவரத்து), கந்தசாமி (மின்சாரம்) ஐ.ஜான் பாட்ஷா (தொலைபேசி), ராமதாஸ் (போக்குவரத்து), தங்கவேல் (அங்கன்வாடி), மோகன்குமார் (அரசு ஊழியர்) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சிஐடியு சங்க கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் சிறப்பு ரையாற்றினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து அமைப்புகளின் ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.