பெரம்பலூர், மே 11 - பெரம்பலூர் மாவட்டத் தில் இணையவழி உட்பிரிவு பட்டா மாற்றத்தில் உள்ள நிலுவை மனுக்களை தீர்வு செய்திடும் வகையில் சிறப்பு உட்பிரிவு பட்டா மாற்ற முகாம் மற்றும் தமிழ்நிலம் மென்பொருளில் உள்ள எளிய பிழைகளை திருத்தம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது. பெரம்பலூர் வட்டத்தில் 1.8.2021 முதல் 31.1.2022 வரையிலும், வேப்பந்தட்டை வட்டத்தில் 1.8.2021 முதல் 30.4.2022 வரையிலும், குன்னம் வட்டத்தில் 1.8.2021 முதல் 30.4.2022 வரையிலும், ஆலத்தூர் வட்டத்தில் 1.8.2021 முதல் 30.4.2022 வரையி லும் உள்ள காலங்களில் சார் பதிவாளர் அலுவலகங் களில் பத்திரப் பதிவு செய்து தனிப் பட்டாவிற்காக உட் பிரிவு கட்டணம் செலுத்திய பொதுமக்கள் மற்றும் இ- சேவை மையம் மூலமாக உட் பிரிவு செய்து தனி பட்டா கோரி விண்ணப்பித்த மனு தாரர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் அந்நா ளில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தனிப்பட்டா பெற்றுக் கொள்ளலாம். மேலும் 11.5.2022 மற்றும் 12.5.2022 ஆகிய நாட்களில் பெரம்பலூர் வட்டத்தில் எளம்பலூர், வேப்பந்தட்டை வட்டத்தில் அரும்பாவூர், குன்னம் வட்டத்தில் திரு மாந்துறை, ஆலத்தூர் வட்டத்தில் பாடாலூர் (மே) ஆகிய பகுதிகளிலுள்ள கிராம நிர்வாக அலுவல கங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. 18.5.2022 மற்றும் 19.5.2022 ஆகிய நாட்களில் பெரம்பலூர் வட்டத்தில் பெரம்பலூர்(வ), வேப்பந்தட்டை வட்டத்தில் வேப்பந்தட்டை(வ), குன்னம் வட்டத்தில் வடக்கலூர், ஆலத்தூர் வட்டத்தில் நக்க சேலம் ஆகிய பகுதிகளி லுள்ள கிராம நிர்வாக அலுவ லகங்களில் சிறப்பு முகாம் கள் நடைபெறவுள்ளன.
1.6.2022 மற்றும் 2.6.2022 ஆகிய நாட்களில் பெரம்ப லூர் வட்டத்தில் பெரம்ப லூர்(தெ), வேப்பந்தட்டை வட்டத்தில் வேப்பந்தட்டை (தெ), குன்னம் வட்டத்தில் அகரம்சீகூர், ஆலத்தூர் வட்டத்தில் நொச்சிக்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடை பெறவுள்ளன. 8.6.2022 மற்றும் 9.6.2022 ஆகிய நாட்களில் பெரம்பலூர் வட்டத்தில் துறைமங்கலத் திலும், வேப்பந்தட்டை வட்டத்தில் வாலிகண்டபுரம், குன்னம் வட்டத்தில் வயலப்பாடி, ஆலத்தூர் வட்டத்தில் இரூர் ஆகிய பகுதிகளிலுள்ள கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடை பெறவுள்ளன. 15.6.2022 மற்றும் 16.6. 2022 ஆகிய நாட்களில் பெரம்பலூர் வட்டத்தில் செங்குணம், வேப்பந்தட்டை வட்டத்தில் பூலாம்பாடி, குன்னம் வட்டத்தில் சிறு மத்தூர், ஆலத்தூர் வட்டத்தில் புஜங்கராய நல்லூர் ஆகிய பகுதிகளி லுள்ள கிராம நிர்வாக அலு வலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் நடைபெறும் கிராம நிர்வாக அலுவல கங்களுக்கு சென்று இந்த சிறப்பு முகாமினை விவ சாயிகள் மற்றும் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்து உள்ளார்.