districts

img

பெரம்பலூர் மாவட்டத்தில் 27 புதிய குளங்கள் உருவாக்கும் பணிகள் தீவிரம்

பெரம்பலூர், ஏப்.9- பெரம்பலூர் மாவட்டத்தில் மிஷன் அமிர்த சரோவர் திட்டத்தின் கீழ் ரூ.5.71 கோடி மதிப்பில் இருபத்தேழு புதிய  குளங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக  கூறினார் ஆட்சியர் க.கற்பகம் மாவட்டத்தில் நடைபெற்று வரும்  பணிகள் குறித்து ஆய்வு செய்த மாவட்ட  ஆட்சியர் க.கற்பகம் கூறியதாவது:-  அம்ரித் சரோவர் திட்டத்தின் மூலம்  ரூ.5 கோடியே 20 லட்சத்து 93 ஆயிரம்  மதிப்பில் 27 புதிய குளங்கள் அமைக்க வும், ஏழு குளங்களைப் புனரமைப்ப தற்கும் போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.      பெரம்பலூர் ஊராட்சியில் கல்பாடி ஊராட்சியில் அப்பூரான் கோவில் குளம்  அருகில் ரூ.5.80 லட்சம், மேல தாமரைக் குட்டை அருகில் ரூ.5.80 லட்சம்,  மேலப் புலியூர் ஊராட்சியில் ரூ.5.80 லட்சம், செங் குணம் ஊராட்சியில் ரூ.5.80 லட்சம்,  செங்குணம் பாலம்பாடி பகுதியில் ரூ.43. 25 லட்சம், எசனை பூந்தோப்புக்குளம் அருகில் ரூ.50.77 லட்சம் மதிப்பில் புதிய  குளங்கள் அமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஐந்து பணிகள் முடிவடைந்துள்ளது.    ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத் தில்  நாரணமங்கலம் ஊராட்சியில் மருதடி ஈச்சங்காடு அருகில் ரூ.5.80  லட்சம் மதிப்பில் புதிய குளம் அமைக்கப் படுகிறது. தவிர நாட்டார்மங்கலம், தெரணி, காரை(கி), எலந்தலப்பட்டி, இரூர், கூடலுார் மற்றும் கொட்டரை ஆகிய பகுதிகளில் பத்து புதிய குளங்கள் அமைக்கும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு ஆறு பணிகள் முடிக்கப் பட்டுள்ளது. வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத் தில் பசும்பலூர், தொண்டமாந்துரை (கி), வாலிகண்டபுரம், பெரியம்மா பாளையம், தேவையூர் மற்றும் அனுக் கூர் ஆகிய பகுதிகளில் ரூ.88.52 லட்சம்  மதிப்பில் ஐந்து புதிய குளங்கள்  அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு இரண்டு பணிகள் முடிவடைந்துள் ளது. மூன்று பணிகள் நடைபெற்று வரு கிறது.  பசும்பலூர்(தெ), பிரம்மதேசம், வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை (தெ)  ஆகிய பகுதிகளில் ஏற்கனவே உள்ள குளங்கள் ரூ.1.04கோடி மதிப்பில் புனர மைக்கப்பட்டு குளத்திற்கான நீர்வழித் தடங்கள் சரி செய்யப்பட்டு வருகிறது. வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில், சிறுமத்தூர், பேரள(வ), பேரளி(தெ), பரவாய்(மே), ஓலைப்பாடி (கி) ஆகிய பகுதிகளில் ரூ.1.75கோடி மதிப்பில் 5  புதிய குளங்கள் அமைக்கும் பணிகள்  நடைபெற்று வருகிறது.  பெரியம்மா பாளையம், பரவாய் மேற்கு மற்றும்  கிழக்கு ஆகிய பகுதிகளில் ரூ.90,000 மதிப்பில் மூன்று குளங்கள் புனர மைக்கப்பட்டு வருகிறது.                    மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட் சிகளிலும் புதிய குளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.