districts

பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்திற்கு கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க சிபிஎம் வலியுறுத்தல்

பெரம்பலூர், ஜூன் 18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டக் குழு கூட்டம் துறைமங்கலத்திலுள்ள கட்சி அலுவ லகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.கலையரசி தலைமை வகித்தார். மாவட்ட சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.அகஸ்டின், ரெங்கநாதன், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் சாமி.நடரா ஜன் சிறப்புரையாற்றினார்.  பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட திரு மாந்தறை, எறையூர் சர்க்கரை ஆலை,  பெருமத்தூர், மிளாகநத்தம், லெப்பை குடிக்காடு, அயன்பேரையூர் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப் பதாக கூறி ஆந்திராவை சேர்ந்த ஜிவிகே  குழுமமும் இந்திய பெருவணிகத் துறை யும் சேர்ந்து 2007 ஆம் ஆண்டு கையகப் படுத்தின. 15 ஆண்டுகள் ஆகியும் எந்த ஒரு  தொழிற்சாலையும் துவக்கப்பட வில்லை. நிலம் கொடுத்த விவசாயிகள்  வாழ்வாதாரம் இழந்து விவசாயத் தொழி லாளர்களாகவும் வெளிமாவட்டங் களில் வேலை தேடியும் தவித்து வரு கின்றனர்.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013ன் படி எந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அந்த  திட்டம் கையகப்படுத்திய நாட்களி லிருந்து 5 ஆண்டுகளுக்குள் நிறை வேற்றப்பட வேண்டும் என்கிற சட்ட விதி களின்படி, அரசும் ஜிவிகே குழுமமும் செயல்படவில்லை.  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட தோழமை கட்சிகள் சார்பில் நில  மீட்பு போராட்டம் நடத்தி, தமிழக அரசிற்கு  மாவட்ட நிர்வாகம் மூலம் கோரிக்கை மனு அளித்தனர்.  இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின், தற்போது அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அனல்  மின் நிலக்கரி திட்டத்திற்கு கையகப்படுத் திய நிலத்தை, நிலம் கொடுத்த விவசா யிகளிடமே அரசு திரும்ப ஒப்படைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி  உள்ளது. அதேபோல பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத் திற்கு கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என முடிவு செய்யப் பட்டுள்ளது.