districts

img

எறையூர் சிப்காட் தொழில் பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்

பெரம்பலூர், நவ.28-  தமிழ்நாடு அரசின் 2022-23-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், கோயம்புத்தூர், பெரம்பலூர், மதுரை, வேலூர்,  திருவள்ளுர் ஆகிய மாவட்டங்க ளில் தொழில் துறை வளர்ச்சியை  ஊக்குவிக்கும் பொருட்டு, புதிய  தொழில் பூங்காக்கள் அமைக்கப் படும் என அறிவிக்கப்பட்டது. அதன்  படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூரில் 243.49 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்கப்பட்டு, அதனை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.  தோல்பொருட்கள் துறை யில், தமிழ்நாடு பாரம்பரிய பெரு மையை கொண்டுள்ளது. உலக ளவில் தோல் இல்லாத காலணி களின் நுகர்வும், விளையாட்டு கால ணிகளுக்கு நுகர்வோர் விருப்ப மும் அதிகளவில் உள்ளது. மேலும்,  இத்துறையில் அதிக வளர்ச்சி மட்டு மின்றி, மிகப்பெரிய ஏற்றுமதி சாத்தி யக் கூறுகளும் உள்ளன.  இராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் ஒரு காலணி பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் எறையூர் இரண்டாவது காலணி பூங்காவாக இருக்கும். இதன் தொடர்ச்சியாக, குறுகிய காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி யை ஊக்குவிக்கும் வகையில், எறையூர் சிப்காட் தொழில் பூங்கா வில் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்காவிற்கு முதலமைச்சர் ஞாயி றன்று அடிக்கல் நாட்டினார்.  காலணி மற்றும் தோல் பொருட்  கள் உற்பத்திக்கான தனிக் கொள்கை வெளியிடப்பட்ட 23.8. 2022 அன்று கோத்தாரி ஃபீனிக்ஸ் அக்கார்டு நிறுவனத்துடன் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கை யெழுத்திடப்பட்டு அதன் மூலம்,  25,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.  

திங்களன்று முதலமைச்சர் முன்னிலையில், தமிழ்நாடு வழி காட்டி நிறுவனத்தோடு ஃபீனிக்ஸ்  கோத்தாரி காலணி பூங்கா மற்றும் அதன் 10 தொகுப்பு நிறுவனங்களு டன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன் வாயிலாக ரூ.740 கோடி முதலீடு ஈர்க்கப்படுவதுடன் 4,500 நபர் களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்  படுத்தவுள்ளது. இதுவரை மேற்  கொள்ளப்பட்ட 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் ரூ.2,440  கோடி முதலீடு ஈர்க்கப்படுவது டன், 29,500 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாக்கப்படவுள்ளது.  இந்த 12 புரிந்துணர்வு ஒப்பந்  தங்களையும் சேர்த்து, எதிர்காலத் தில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமையவிருக்கும் தோல் அல்லாத  காலணி மற்றும் அதன் தொகுப்பு தொழில் நிறுவனங்களின் மூலம் ரூ.5,000 கோடி முதலீடு ஈர்க்கப் படும் என்றும், 50,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொழில் நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் பெண்களுக்கு முன்னு ரிமை அளிக்கப்படுவதன் மூலமாக  பின்தங்கிய மாவட்டமான பெரம்ப லூர் மாவட்டத்தில், பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைவதுடன் மாவட்டத்தின் வளர்ச்சி மேலும் உயர்நிலை அடையும்.  விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பி னர் ம.பிரபாகரன், தொழில் முத லீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்த கத்துறை கூடுதல் தலைமைச் செய லாளர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலா ண்மை இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ.சுந்தரவல்லி, பெரம்ப லூர் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீ.வெங்க டபிரியா, தமிழ்நாடு தொழில் முன் னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, கோத்தாரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜின்னா ரஃபிக் அஹ மத், எவர்வேன் நிறுவனத்தின் தலைவர் ராங் வு சேங், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டுறவுத்துறை பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் க. பாண்டியன், துணைப்பதிவாளர் கே.கே.செல்வராஜ், வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.