பெரம்பலூர், பிப்.18 - பெரம்பலூர் நகராட்சி மற்றும் 4 பேருராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்.19 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் 11, 12, 15, 20, 24, 28, 31 ஆகிய ஏழு வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்ட றியப்பட்டு அந்த 7 வாக்குச் சாவடிகளுக்கும் நுண் பார்வையாளர்கள் தனியே நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்குப்பதிவு எந்தி ரங்கள் அனைத்தும் பெரம் பலூர்-அரியலூர் சாலை எறையூர் மகாத்மா பப்ளிக் பள்ளிக்கு கொண்டு வரப் பட்டு தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படு கிறது. வாக்கு எண்ணும் மையத்தினை வெள்ளி யன்று ஆட்சியர் ப.ஸ்ரீவெங் கட பிரியா ஆய்வு மேற் கொண்டார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதி முழுவதும் கண்கா ணிப்பு கேமரா பொருத்தப் பட்டு மூன்று அடுக்கு பாது காப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நகராட்சிக்கு 7 டேபிள்க ளும், பேரூராட்சிக்கு தலா இரண்டு டேபிள்கள் அமைக் கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. முழு மையாக அனைத்து பகுதியி லும் கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆய்வின்போது பெரம்பலூர் நகராட்சி உதவி பொறியாளர் ஜெயமாலதி, பணி மேற்பார்வையாளர் தேவி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.