districts

img

வாழ்வாதாரத்தை பறிக்கும் புதுச்சேரி அரசு! சாலையோர வியாபாரிகள் ஆவேசம்

புதுச்சேரி,அக்.13- சாலையோர வியா பாரிகளின் வாழ்வாதரத்தை பறிக்கும் புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ஆவேசப் போராட்டம் நடைபெற்றது. சாலையோர வியா பாரிகளின் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்படும் பொதுப் பணித்துறை, நகராட்சி மற்றும் காவல்துறை அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமை யில் ஏற்கனவே அமைக்கப்பட்ட குழுவை உடனடியாக கூட்ட வேண்டும். ஸ்மார்ட் சிட்டி நிதியிலிருந்து சாலையோர வியாபாரிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி புதுச்சேரி காம ராஜர்சிலை நடந்த போராட்டத்தில் அரசால் வழங்கப்பட்ட உரிமத்தை ஏந்தியவாறு வியாபாரிகள் கலந்துகொண்டு முழுக்கம் எழுப்பினர். சாலையோர வியா பாரிகள் சங்கத்தின் (சிஐ டியு) பிரதேச கவு ரவத் தலைவர் என்.பிரபு ராஜ் தலைமை தாங்கி னார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், சிஐடிய பிரதேச செயலாளர் சீனுவாசன்,பொருளாளர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் மதிவாணன், தினேஷ்குமார், ஜீவானந்தம், அழகர்ராஜ், வடிவேல், வீரமணிகண்டன் உள்ளிட்டோர் கோரிக்கை களை வலியுறுத்திப் பேசினர். முன்னதாக சாலையோர வியாபாரிகளுக்கு புதுச்சேரி அரசால் வழங்கப்பட்ட உரிமத்தின் நகலை எரித்தனர்.

;