districts

புதுச்சேரி பாஜக கூட்டணி அரசில் பிரீபெய்டு மீட்டர் திட்டத்தில் ஊழல் விசாரணை நடத்த நாராயணசாமி வலியறுத்தல்

புதுச்சேரி, பிப். 5- புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து ஞாயிறன்று (பிப். 5) ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. பின்னர் முன்னாள் முதல்வர் நாராயண சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த வாரம் அமெரிக்காவை சேர்ந்த `ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் அதானி குழுமம் சம்பந்தமாக ஆராய்ச்சி செய்து ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் அதானி குழுமமானது எல்ஐசியில் ரூ.87 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. எஸ்பிஐ வங்கியில் ரூ.28 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. அவர்கள் தங்களுடைய பங்குகள் குறைந்த விலையில் விற்றாலும் கூட, அதனை அதிகமாக காட்டி வங்கிகளை ஏமாற்றி பணத்தை வாங்கி இருக்கிறார்கள். மோடியின் ஆதரவால்தான் அவர் மிகப் பெரிய பணக்காரர் ஆனார். இதில் மோடி யின் பங்கு அதிகமாக உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி உண் மையை கண்டறிய வேண்டும். இது குறித்து மோடி அரசு வாய் திறக்கவில்லை. இதை மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும். நாம் எப்படி செல்போனுக்கு பணத்தை செலுத்திவிட்டு பேசுகிறோமோ, அதே போல் புதுச்சேரியில் மின் கட்ட ணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்கிறார்கள். ஏழைத் தொழிலாளர்கள், விவ சாயிகள், தினக்கூலி ஊழியர்கள், தாய்மார்கள் எப்படி முன்கூட்டியே பணத்தை செலுத்திவிட்டு மின்சாரத்தை பெற முடியும். இதுபோன்ற திட்டம் இந்தியா வில் எந்த மாநிலத்திலும் கிடையாது. இந்த திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே மின்துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்தார்கள். அடுத்ததாக ரூ.250 கோடி வாங்கி பிரீபெய்டு மின் மீட்டரை இவர்கள் பொறுத்திவிட்டு, மின்துறையை தனியாரிடம் தாரை வார்க்க இந்த வேலை நடக்கிறது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கூறினார்.