புதுச்சேரி, டிச.7- புதுச்சேரியில் இந்தி திணிப்பு நட வடிக்கைக்கு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் புதுச்சேரி செய லாளர் மணி.கலியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுவை அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த நவம்பர் 29 அன்று நடைபெற்ற அரசு விழாவுக்கான அழைப்பிதழில், ஜன்ஜட்டியா கவுரவ் நிவாஸ் விழா என்று இந்தியில் அச்சடித்து அரசு வெளியிட்டிருக்கிறது. புதுச்சேரி மாநில பொறுப்புத் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ந.ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவின் அழைப்பிதழ் இந்தியில் அச்சடிக்கப்பட்டது அப்பட்டமான இந்தி திணிப்பு மட்டுமல்ல தாய்மொழி அழிப்பு செயலாகவே கருத வேண்டியுள்ளது. புதுச்சேரி மாநிலம் என்பது புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளை உள்ளடக்கிய மாநிலம், இங்கு வசிக்கும் மக்கள் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளை பேசுபவர்கள். இந்த மாநில மக்களின் இணைப்பு மொழி யாக ஆங்கிலம் இருக்கிறது. கடந்த காலங்களில் இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தின் காரணமாக, அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, மக்கள் தாங்க ளாக இந்தியை ஏற்றுக் கொள்ளும் வரை இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடரும் என்று அறிவித்தார் அதே நிலை தான் இன்று வரை தொடர்கிறது. எனவே அரசு உடனடியாக மாநில அரசிற்கான ஒரு மொழிக் கொள்கையை உருவாக்க வேண்டும். தாய் மொழியோடு இணைப்பு மொழியாக ஆங்கிலம் என்பதை அறிவிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற இந்தி திணிப்பு அராஜகத்தில் ஈடுபடக் கூடாது. தொடர்ந்து இந்தியை திணிக்க முயற்சித்தால், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அனைத்து கலை இலக்கிய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மீண்டும் ஓர் மொழிப் போரை முன்னெடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.