புதுச்சேரி, மார்ச் 9- முத்தியால்பேட்டையில் 9 வயதுச் சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட கொடூரத்திற்கு முழுப் பொறுப்பேற்று முதல மைச்சர் ரங்கசாமியும் பாஜக அமைச்சர் நமச்சிவாயமும் பதவி விலகக் கோரி வாலி பர், மாணவர் இயக்கங்கள் புதுச்சேரி சட்டப்பேரவை யை முற்றுகையிடும் போராட் டத்தை நடத்தினர்.
புதுச்சேரி வரலாற்றில் இல்லாத வகையில்- 9 வய துச் சிறுமிக்கு நேர்ந்த மிக கொடூரமான துயரச் சம்ப வத்திற்கு, போதைக் கலாச் சாரமும், அதனை ஊக்கப் படுத்தும் விதமாக செயல் படும் பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசே காரணம் என்பதால், அதற் குப் பொறுப்பேற்று முதல்வ ரும், உள்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் போராட் டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணா சிலை எதிரில் இருந்து துவங் கிய ஊர்வலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம், மாண வர், இளைஞர் காங்கிரஸ், திமுக மாணவரணி, புதுச் சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு, முற் போக்கு மாணவர் கழகம், இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை, தமிழ் மாணவர் மன்றம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தலித் மக் கள் பாதுகாப்பு இயக்கம், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் ஆகிய இயக்கங்க ளின் தலைவர்கள் ஆனந்த், மணிமாறன் பிரவீன் குமார், ஜெயபிரகாஷ், ஆனந்த் பாபு, தமிழ்வாணன், எழி லன், முரளி உள்ளிட்ட நிர்வா கிகள் உட்பட திரளான வாலி பர்கள் மாணவர்கள் போராட் டத்தில் பங்கேற்றனர்.
பேரணியானது, அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி கடந்து சட்டப் பேரவையை நோக்கிச் சென்றபோது காவல்துறை யினர் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர். இத னால் அந்த இடத்தில் வாக்கு வாதமும் தள்ளுமுள்ளு ஏற் பட்டது.