districts

img

மின் துறை பாதுகாப்பு இயக்கம்...

புதுச்சேரி  மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்தும் தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டிலேயே செயல்பட வலியுறுத்தியும் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும்  ஜனநாயக அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை (மே 31) மனித சங்கிலி இயக்கம்  புதுச்சேரி முழுவதும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக காமராஜர் சிலை எதிரே மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் திராளக பங்கேற்றனர்.