புதுச்சேரி, ஜன.9 புதிய கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட அனுமதித்திடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லாஸ்பேட்டை பெத்துசெட்டி பேட்டை யில் ரூ.12 லட்சம் மதிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுத்த வேண்டும்.இதற்கான உத்தரவை உழவர்கரை நகராட்சி ஆணையர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. பெத்துசெட்டிபேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகரக்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமை தாங்கி னார். பிரதேச செயலாளர் ராஜாங்கம், உழவர்கரை நகர செயலாளர் ராம்ஜி, செயற்குழு உறுப்பினர்கள் கொளஞ்சி யப்பன்,சத்தியா, கிளைச் செயலாளர் ராமசாமி,உடல் உழைப்போர் சங்க பொருளாளர் குமார் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். மனதாக அங்கன்வாடி கட்டிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரக் கோரி முழக்கமிட்டனர்.