புதுச்சேரி பிள்ளைச்சாவடி நா.வரதன் அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் அகரம் ஸ்ரீபாரத் வித்யாஸ்ரமம் பள்ளி இணைந்து இயற்கை வள பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை திலகவதி தலைமை தாங்கினார். ஸ்ரீபாரத் வித்யாஸ்ரமம் பள்ளி முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் , அறிவியல் இயக்கத்தின் பொதுச்செயலாளர் அருண் நாகலிங்கம், காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய தமிழ்த்துறை பேராசிரியர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இயற்கை வள பாதுகாப்பு நாள் குறித்த அவசியத்தை விளக்கினர்.