புதுச்சேரி,மார்ச் 27- 10 ஆண்டு பாஜக ஆட்சியில் 9 மாநில ங்களின் ஆட்சியை கவிழ்த்தது தான் மோடியின் சாதனை என்று புதுச்சேரி யில் ஜி.ராமக்கிருஷ்ணன் விளாசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் மக்க ளவை தேர்தல் பிரச்சார துவக்க பொதுக் கூட்டம், சாரம் ஜீவானந்தம் சிலை எதிரே நடைபெற்றது.இப்பொதுக் கூட்டத் திற்கு மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, இந்தியா கூட்டணியின் புதுச் சேரி மக்களவை வேட்பாளர் வெ.வைத் திலிங்கத்தை,எம்பி., ஆதரித்து பேசி னார். அவர் பேசியதாவது:- நாடு முழுவதும் பாஜக விற்கு எதிரான அலை தற்போது வீசிவரு கிறது. தென் மாநிலங்களான தமிழகம், கேரளம்,ஆந்திரா,கர்நாடாகவில் இருந்த பாஜகவின் எதிர்ப்பு மனநிலை தற்போது, வடமாநிலங்களில் வீசுகி றது. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால், தேர்தல் பங்கு பத்திர ஊழல் நடை பெற்றுள்ள சம்பவம் வெளியானதால் மோடி,அமித்ஷா வகையராக்கள் மிகுந்த பதட்டத்தில் உள்ளனர்.
இதை மறைக்கவே தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது சம்பவத்தை பாஜக அரங்கேற்றியது. ஏற்கெனவே ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா ராஷ்டி ரிய சமீதி கட்சியின் தலைவர் சந்திர சேகர ராவ் மகள் கைது செய்து சிறை யில் அடைத்துள்ளனர்.
இப்படி எதிர்கட்சி தலைவர்களை கைது செய்துள்ள சம்பவத்தால் நாட்டு மக்களிடம் பெரும் கோப அலை எழுந்து ள்ளது. நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தற்போது எழுந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக, 10 ஆண்டுகளில் 9 மாநில அரசுகளை கவிழ்த்துள்ளது.மத்தியபிரதேசம்,மகாராஷ்டிரா,கர்நாடகா,கோவா,உத்தரகாண்ட்,மணிப்பூர்,மேகாலயா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங் களில் இருந்த காங்கிரஸ் ஆட்சிகளை கவிழ்த்தார்கள்.
ஆடு,மாடுகளை சந்தையில் விலைகொடுத்து வாங்கு வது போல், இதுவரை 182 எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்த்தது.இந்த சாதனை களை தவிர வேரெதையும் பாஜக செய்யவில்லை. ஊழலை ஒழிப்போம் என்று கூறிய மோடி, ஊழலுக்கு வழிவகுக்கும் தேர்தல் பங்கு பத்திரம் வழங்கும் மோசடி சட்டத்தை கொண்டு வந்தார். இந்த சட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி அப்போதே எதிர்த்தது. உச்சநீதிமன்றம் இன்றைக்கு அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது.
இந்த சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள பணத்தில், பாஜக 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட தொகையை பெற்று ஆதாயம் அடைந் துள்ளது. தேர்தல் பத்திர பணம் வழங்கிய 38 நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தங்களை பாஜக அரசு வழங்கியுள்ளது. இச்சம்ப வத்தின் மூலம் மோடி ஆட்சி மத வெறி கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டு களவாணி என்பது உறுதியாகி யுள்ளது. ஆங்கில இந்து நாளேட்டில் வெளியான தலையங்கத்தில், பாஜக தலைமை அப்பட்டமான மோசடி செய்துள்ளது என்று விமர்சித்து எழுதும் அளவிற்கு பாஜக உள்ளது.
எனவே பாஜக கட்சி சார்பில் புதுச்சே ரியில் போட்டியிடும் வேட்பாளரை புறக்கணிக்க வேண்டும். இந்தியா கூட்டணி வேட்பாளர் வெ.வைத்தி லிங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்று ஜி.ராமக்கிருஷ்ணன் கேட்டு கொண்டார். முன்னதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சிபிஐ மாநில செய லாளர் அ.மு.சலீம்,திக மாநில தலைவர் சிவ.வீரமணி,சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா,பெருமாள்,ராமச்சந்திரன்,தமிழ்ச்செல்வன்,பிரபு ராஜ்,கொளஞ்சியப்பன்,கலியமூர்த்தி, சத்தியா, இடைகமிட்டி செயலா ளர்கள்,மாநிலக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.