districts

புதுவையில் 3 பேருக்கு கொரோனா

புதுச்சேரி, ஏப். 29- புதுவையில் 3 பேர் கொரோனா தெ?ற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வருகின்றனர். புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து பூஜ்யத்தை எட்டியது. கடந்த ஒரு மாதமாக யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. புதுவையில் 263 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக புதுவையில் 2, காரைக்காலில் ஒருவர் என 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 7, காரைக்காலில் 2, ஏனாமில் ஒருவர் என 10 பேர் தொற்றுடன் வீட்டுத் தனிமையில் உள்ளனர். ஏனாமில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,962ஆக உள்ளது. புதுவையில் 2ஆவது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 16 லட்சத்து 81 ஆயிரத்து 629 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்தத் தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறி முறைகளை தொடரவும், அனைவரும் முகக்கவசம் அணியவும் மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.

;