புதுச்சேரி, ஜூலை 30 புதுவை லாஸ்பேட்டை நேருவில்லா நகர் புனித மேரி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (43).வெளி நாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது உறவின ரான லாஸ்பேட்டை சாந்தி நகர் திரு.வி.க. தெருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான ஆரோக்கிய ராஜ் மற்றும் அவரது மனைவி நான்சி நாகசுந்தரி, குமரன், சீதாராமன் உள்பட 12 பேர் மகாபலிபுரத்தில் உள்ள இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில் இடத்தை போலி யான ஆவணம் தயாரித்து ரூ.1 கோடியே 63 லட்சத்திற்கு ராஜேந்திர னிடம் விற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் நில மோசடியில் ஈடு பட்ட 12 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 ஆண்டுகளாக தேடிவந்தனர். இதில் சீதாராமனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்த னர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் ஒரு வரான தனியார் பொறி யியல் கல்லூரி பேராசிரிய ரான அபிலாஷ் ராஜீவ் தரணையும் காவல் துறை யினர் கைது செய்தனர்.