districts

img

சுகாதார ஆய்வாளர்கள் வெள்ளை நிற ஒவர்கோட் அணிய அனுமதித்திடுக

புதுச்சேரி, ஏப். 10- புதுவை முல்லை நகரில் உள்ள அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் தலை வர் திருமலை தலைமையில் நடைபெற்றது. கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், சுகாதார ஊழியர் சம்மேளன தலை வர் கீதா, அமைப்பு செயலர்  மணிவண்ணன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஜவகர் பணி மறுகட்டமைப்பு செய்ய தடையாக உள்ள ஒரு  நபர் குழு குறித்து விளக்கி னார். அமைப்புச் செயலா ளர் இளையதாசன், தொழில் நுட்ப உதவியாளர் பதவி  உயர்வுக்கு தடை பெறுவ தால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கினார். செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் முனுசாமி ஆகியோரும் பேசினர். கூட்டத்தில், பொது சுகாதார சட்டத்தை உடனே  தகுந்த மாற்றங்கள் செய்து  அமல்படுத்த வேண்டும். சுகாதார ஆய்வாளர்களுக்கு வெள்ளை நிற ஓவர்கோட் அணிந்து பணி செய்ய அனு மதிக்க வேண்டும். சுகாதாரத் துறை மூலம் பள்ளிகளுக்கு வழங்கும் சான்றிதழ்களை அந்தந்த ஆரம்ப சுகாதார  நிலையத்துக்கு உட்பட்ட  ஆய்வாளர்கள் மேற்பார் வையிட்டு, மருத்துவ அதிகாரிகள் மூலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக அமைப்பு செயலர் கிரி வரவேற்றார். இணைச் செய லாளர் பன்னீர் செல்வம் நன்றி கூறினார்.