புதுச்சேரி,ஜன.1- புதுச்சேரியில் கடலில் குளித்த மாணவர்கள் 4 பேர் அலையில் சிக்கி மாயமாகி உள்ளனர். தொடர் விடு முறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுச்சேரி யில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் காவல்துறையினரின் எச்சரிக்கை யையும் மீறி கடலில் குளிக்கும் போது அலைகளில் சிக்கி இறப்பது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு கடலில் இறங்கி குளிக்காமல் இருப்பதற்கு தடுப்பு கட்டைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனையும் மீறி புதுச்சேரி நெல்லித்தோப்பு டிஆர் நகரை சேர்ந்த சீனிவாசன் – மீனாட்சி தம்பதியினரின் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மகள்கள் மோகனா (16), லேகா (14) ஆகியோர் பழைய துறை முகப்பகுதியில் குளித்தனர்.
அவர்கள் தாயார் மீனாட்சி கடற்கரையில் அமர்ந்திருந்தார். அதேபோல் கதிர்காமம் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு பயிலும் நவீன் (16) மற்றும் அவரது நண்பர் கிஷோர் (16) ஆகியோர் அதே பகுதியில் குளித்தனர். அப்போது திடீரென எழுந்த மிகப்பெரிய அலை யில் சிக்கி நான்கு பேரும் கடலுக் குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒதியஞ் சாலை காவல் மற்றும் கடலோர காவல் படை மற்றும் மீனவர்கள் உதவியுடன் மாயமானவர்களை தேடினர்.
இதில் சிறுமி லேகா வின் உடல் வீராம்பட்டினம் பகுதியில் கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.