புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை அடுத்த திருநல்லூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 800 காளைகள் பங்கேற்றன. மாடு முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.