அறந்தாங்கி, டிச.10- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் துரையரசபுரம் கூட்டு றவு நூற்பாலையை தனியாருக்கு விற்கக் கூடாது, சிஐடியுவில் தங்களை இணைத்து கொண்டு, 10 வருடத்திற் கும் மேல் பணியாற்றிவரும் 300க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களை சட்டபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறந்தாங்கி சோதனை சாவடி பகுதியிலிருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. இதனை கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை முன்னிலையில், சிபிஎம் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் கவிவர்மன் துவக்கிவைத்தார். பேரணி பெரிய கடை வீதி, எம்ஜிஆர் சிலை, கட்டுமாவடிமுக்கம் வழியாக வந்து பேருந்து நிலையத்தில் நிறைவுற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு. நூற்பாலை தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலை வர் எல்.அலாவுதீன், செயலாளர் ஆர். கர்ணா, உதவி தலைவர் மாணிக்கம் ஆகியோர் தலைமை வகித்தனர். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னதுரை, பஞ்சாலை தொழி லாளர் சம்மேளனம் பொதுச்செயலாளர் எம்.அசோகன், சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், சிஐடியு மாவட்ட தலைவர் முகமதலி ஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர், இராமநாதபுரம் மாவட்ட பஞ்சாலை மாவட்ட தலைவர் உமாநாத், தேனி மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.