புதுக்கோட்டை, மார்ச் 21- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் பணி புரிந்த போது மரணம் அடைந்தவர்களின் வாரிசுகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு செவ் வாய்க்கிழமை பணி ஆணைகளை வழங்கினார். பணியில் இருக்கும் போது மரணம் அடைந்த இரண்டு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் இரண்டு அங்கன் வாடி உதவியாளர்களின் வாரிசுதாரர்களான ரஞ்சிதா மற்றும் உமாபிரியா ஆகியோருக்கு கருணை அடிப்படை யில் அங்கன்வாடி பணியாளர்களாகவும், கே.கலைச் செல்வி மற்றும் பா.சித்ரா ஆகியோருக்கு அங்கன்வாடி உதவியாளர்களாகவும் பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார். ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ் வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.