districts

img

40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஆ.நால்ரோடு மக்களுக்கு மனைப் பட்டா வழங்கக் கோரி வி.தொ.ச ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 16 - புதுக்கோட்டை மாவட் டம் விராலிமலையை அடுத்த  ஆம்பூர்பட்டி நால்ரோடு கிரா மத்தில் 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழை களுக்கு குடிமனைப் பட்டா  வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் சார்பில் வெள்ளிக் கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இலுப்பூர் கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம். சண்முகம் தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொருளா ளர் எஸ்.சங்கர் கண்டன உரையாற்றினார். கோரிக் கைகளை விளக்கி மாநிலக் குழு உறுப்பினர் கே.சண் முகம், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எம்.ஆர்.சுப்பையா, சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஜோஷி, ஒன்றியச் செயலாளர் ஏ.இரு தயம், தலைவர் வி.முத்துக் குமார் உள்ளிட்டோர் பேசி னர். விராலிமலை தாலுகா, ஆம்பூர்பட்டி நால்ரோடு கிராமத்தில் 40 ஆண்டு காலமாக குடியிருந்துவரும் ஏழைகளுக்கு வகைமாற்றம் செய்து குடிமனைப் பட்டா  வழங்க வேண்டும். போரம் பூர் கிராமம் மலம்பட்டியில் நத்தம் இடத்தில் அரசாங்கத் தால் பல ஆண்டுகளுக்கு முன்பாக வழங்கப்பட்ட பட்டாக்களை கிராம, வட்டக் கணக்கில் போக்குவரத்து செய்ய வேண்டும். மலம்பட்டியில் வீடுகட்டி குடி யிருப்போர் அனைவருக்கும் குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகள் எழுப்பப் பட்டன.  ஆர்ப்பாட்ட முடிவில்  இலுப்பூர் கோட்டாட்சியரி டம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.

;