புதுக்கோட்டை, மே 8 -
வேங்கைவயலில் பட்டியலின மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், 3 பேருக்கு சென்னையிலுள்ள தடயவியல் ஆய்வகத்தில் புதன்கிழமையன்று குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கெனவே ஒரு காவலர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 31 பேரிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.
இந்நிலையிலேயே புதனன்று சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட 3 பேருக்கு அங்கு குரல் மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.