அறந்தாங்கி, மார்ச் 29 - புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் முனைவர் சாமி சத்திய மூர்த்தி வழிகாட்டுதலின்படி மணமேல்குடி வட்டார வள மையத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி களுக்கு உட்பட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரி யர்களுக்கு வளர் இளம் பரு வத்திற்கு நல்வழி காட்டும் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்டுமா வடி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி தலைமையாசிரி யர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார் வையாளர் (பொ) சிவயோ கம் முன்னிலை வகித்தார். பயிற்சியில் வளர்இளம் பரு வத்தினருக்கு நல்வழி காட்டும் வகையில் வளர் இளம் பருவத்தினரை புரிந்து கொள்ளுதல், போதை பொருட்களின் வகைகள் மற்றும் அதன் தாக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போதைப்பொருள் பயன் பாடு மற்றும் தற்காப்பு நடவ டிக்கைகளை மேற்கொள்ளு தல், வளரிளம் பருவத்தின ருக்கு ஆரோக்கிய வாழ்விற் கான நல்வழிகள் சார்ந்த திறன்களை வளர்த்தல் போன்ற தலைப்பின் கீழ் அனைத்து ஆசிரியர் களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் மலர்விழி, புதுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரி யர் ஜோகின் ராய் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் முத்துரா மன் ஆகியோர் கருத்தா ளர்களாக செய்யப்பட்டனர்.