districts

img

பொதுமக்களின் தொடர் போராட்டம் வெற்றி பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவு தொடக்கம்

புதுக்கோட்டை, டிச.17 - புதுக்கோட்டை நகரில் பழைய  அரசு மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் பிரிவு தொடங்கப் பட்டது. இது சிபிஎம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட  போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியா கும்.  புதுக்கோட்டை நகரில் 1851 இல்  தொடங்கப்பட்ட பழமையான அரசு மருத்துவமனை, நாட்டின் விடுதலைக் குப் பிறகு 1974 இல் டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, 2017 இல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி  தொடங்கப்பட்ட பிறகு, மாவட்டத் தலைமை மருத்துவமனை அறந்தாங் கிக்கு இடம் பெயர்ந்தது. நகரிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலை வுக்கு மக்கள் செல்ல வேண்டியுள்ள தால் அவசர சிகிச்சைப் பிரிவை மட்டு மாவது இங்கு மீண்டும் செயல்பட வைக்க வேண்டும். அல்லது தாலுகா மருத்துவமனையாக மாற்றப்பட வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், வாலிபர், மாதர், மாணவர் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகளும் தொடர் போராட்டங்களை நடத்தின. இதனைத் தொடர்ந்து 100 படுக் கைகள் கொண்ட வட்டார மருத்துவ மனையாக செயல்படுத்துவது தொடர் பான கருத்துரு கோரப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. இதற்கி டையே தற்காலிகமாக புறநோயாளி கள் பிரிவை மட்டும் இந்த வளாகத் தில் செயல்படுத்துவது என அரசு முடிவு  செய்தது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டதாக அண்மையில் புதுக்கோட்டை வந்த மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் அறிவித்தார். இதனால், டாக்டர் முத்துலட்சுமி  ரெட்டி அரசு மருத்துவமனை புறநோயா ளிகள் பிரிவு வெள்ளிக்கிழமை மாலை  திறந்து வைக்கப்பட்டது. மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இந்த  மருத்துவமனையைத் திறந்து வைத்தார்.  திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்குரைஞர் கே.கே.செல்லபாண்டியன், நகர்மன்றத்  தலைவர் செ.திலகவதி, ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விரைவில் 24 மணி நேர மருத்துவமனை
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர் களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.ரகு பதி கூறுகையில், “இந்த இடத்தில் மீண்டும் மருத்துவமனையை செயல்ப டுத்த முடியாது என கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் கூறினர். தற்போது புற நோயாளிகள் பிரிவு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இதுவே முதல் வெற்றி. தொ டர்ந்து 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவமனையாக இதனைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.