districts

img

மணல் மாட்டுவண்டி குவாரி அமைத்திடுக! அரிமளத்தில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜன.24 - புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே வெள்ளாற்றில் மணல் மாட்டுவண்டி குவாரி அமைக்க வலியுறுத்தி சிஐடியு தொழிற் சங்கத்தின் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டாரப் பகுதியில் மணல் மாட்டுவண்டித் தொ ழிலை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பங் கள் வசித்து வருகின்றன. சட்டவிரோதமாக  லாரிகளில் மணலைக் கடத்தி கொள்ளை யடிக்கும் கும்பல் மீது அதிகாரிகள் சரியான நட வடிக்கை எடுப்பதில்லை. அதே நேரத்தில் சிறிய அளவில் உள்ள பயன்பாட்டிற்காக மணல் எடுத்துப் பிழைப்பு நடத்தி வரும் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் மீது வருவாய்த் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து  வருகின்றனர். இந்நிலையில், மணல் மாட்டுவண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத் தில் உள்ள ஆறுகளின் குறுக்கே மாட்டு வண்டிக்கான மணல் குவாரி அமைக்க வேண்டுமென வலியுறுத்தி சிஐடியு தொழிற் சங்கம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது. அதனொரு பகுதியாக அரி மளம் கடைவீதியில் திங்கள்கிழமை நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்ட  துணைத் தலைவர் ஆர்.வி.ராமையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.நாகராஜன், மணல் மாட்டு வண்டித் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் செல்வராஜ், பழநியப்பன், வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் பேசினர்.