புதுக்கோட்டை, மார்ச் 13 - அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலை வர் சரத்குமார் பாஜகவுடன் கட்சியை இணைத்த தற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்கள் இருவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்துள்ளனர்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக செவ்வாய்க்கிழ மை அறிவித்தார். இந்நிலையில், அக்கட்சி யின் புதுக்கோட்டை மத்திய மாவட்டச் செய லாளர் எம்.ஏ.கனி, கிழக்கு மாவட்டச் செயலாளர் முகமது சுல்தான் ஆகியோர் வாழ்வுரிமைக் கட்சியில் இணைவதாக செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தனர். இந்நிலையில், வாழ்வு ரிமைக் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலர் புலேந்திரன் க.முருகானந்தம் முன்னிலையில், புதுக்கோட்டையில் இணைப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது, வாழ்வுரிமைக் கட்சி யின் மாவட்டச் செயலர் எஸ்.நியாஸ் உடனி ருந்தார்.