districts

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா கல்லூரி மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகள்

புதுக்கோட்டை, ஜுலை 23 - புதுக்கோட்டை மாவட்ட  நிர்வாகமும், தமிழ்நாடு அறி வியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 5 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையொட்டி புதுக் கோட்டை மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் குறும் படப் போட்டிகள், கலை ஞர் கருணாநிதி அரசு மக ளிர் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றன.  போட்டிகளை கவிஞர் தங்கம்மூர்த்தி தொடங்கி வைத்தார். அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் எம்.வீரமுத்து வரவேற்றார். கவிஞர் முத்துநிலவன், புதுக் கோட்டை அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவர் கே.சர வணன், தமிழ்த்துறைப் பேரா சிரியர் முத்தமிழ், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி முனைவர்  ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில், அரசு வழக்கறி ஞர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  பேச்சுப் போட்டியில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி மாணவி கள் ரா.பபிதா முதல் இடத் தையும், வீ.ஜெயலெட்சுமி இரண்டாம் இடத்தையும், மெளன்ட் சியோன் கல்லூரி யின் ர.அரவிந்த் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். பிற போட்டிகளுக்கான முடிவு கள் பின்னர் அறிவிக்கப்படும்.  முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட  செயலர் வீரமுத்து வரவேற் றார். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர் களுக்கும் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட் டது.

;