பொன்னமராவதி, ஜூன் 29 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 1.1.2022 அன்று அறிவித்த 31 சதவீத டிஏ உயர்வுக்கான உத்தரவை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) வழங்க வேண்டும். அந்த உத்தரவின் அடிப்படை யில் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சி களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர் களுக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு 4800 ரூபாய் ஊதியமும், சிறப்பு காலமுறை ஊதியம் வாங்கக் கூடிய துப்புரவு தொழிலா ளர்களுக்கு 7450 ரூபாய் ஊதியம் இந்த வட்டா ரத்தில் போடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மேற்கண்ட ஊதி யங்கள் வழங்கப்பட வேண்டும். வாழைக் குறிச்சி ஊராட்சியில் கடந்த மூன்று ஆண்டு களாக வழங்கப்படாத ஓஎச்டி ஆபரேட்டர் களுக்கான கூடுதல் சம்பளத்தை உடனடி யாக வழங்க வேண்டும். அரசமலை ஊராட்சி யில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்ற பழனி யம்மாள் என்கிற துப்புரவு பணியாளரை எந்த வித உத்தரவும் இல்லாமல் வாய்மொழியாக வேலையை விட்டு நீக்கியது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் வேண்டும். ஆலவயல் ஊராட்சியில் பணிபுரியும் 12 ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு வட்டாட்சியர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ஒப்புக்கொண்டபடி சம்பளங்கள் வழங்கப் படாததை கண்டித்தும் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் குறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை தொழி லாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ) சதா சிவத்திடம புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்தனர். மாவட்ட தலைவர் கே.முகமது அலி ஜின்னா தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் முகமது அனிபா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.