புதுக்கோட்டை, மே 8- அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கான கூட்டம், புதுக்கோட்டையில் புதன்கிழமை யன்று நடைபெற்றது. இதில், விவ சாயத் தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறு தமிழக அர சுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ தலைமை வகித்தார். நடைபெற்ற வேலைகள் குறித்து மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்தலிங்கம் பேசினார். மத்தி யக்குழு முடிவுகளை விளக்கி அகில இந்திய இணைச் செயலா ளர் டாக்டர் வி. சிவதாசன் எம்.பி., உரையாற்றினார். அகில இந்திய துணைத் தலைவர் ஏ.லாசர் நிறைவு ரையாற்றினார்.
இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: “
முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றி செயல்படுத்தியதைப் போல விவ சாயத் தொழிலாளர்களுக்கான நலவாரிய சட்டத்தையும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும். கேரள அரசைப் போல விவசாயத் தொழிலாளர்கள் நல நிதித் திட்டத்தை தமிழக அரசும் செயல்படுத்த வேண்டும். 60 வய தைக் கடந்த விவசாயத் தொழிலா ளர்களுக்கு பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்க ளுக்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைத் தும், பல்வேறு நிபந்தனைகளை விதித்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட் டத்தை ஒன்றிய அரசு சீர்குலைத்து பலவீனப்படுத்தி உள்ளது. நடப்பு நிதியாண்டு தொடங்கி 40 நாட் களை நெருங்கியும், இன்றும் பெரும்பகுதியான ஊராட்சிகளில் நூறுநாள் வேலை வழங்க வில்லை. மாநில அரசு, ஒன்றிய அரசை நிர்ப்பந்தித்து கூடுதலான மனிதசக்தி நாட்களையும் நிதி யையும் பெற்று தொடர்ச்சியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றிய அரசு நகர்ப்புற வேலைத்திட்டத்தை விரிவு படுத்தி அனைத்து நகர்ப்புறப் பகுதி களுக்கும் செயல்படுத்த வேண் டும். தமிழ்நாடு அரசு வேளாண் தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்களை விரைந்து செயல் படுத்த வேண்டும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் உள்ள முறை கேடுகளை களைய வேண்டும். ஏற்கெனவே கட்டப்பட்டு வரும் வீடுகளை போர்க்கால அடிப்படை யில் பூர்த்தி செய்யவும், பழுத டைந்த வீடுகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் விவசாயத் தொழிலாளர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பழங்கள் மற்றும் குளிர்பானங் களை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுக்க வேண் டும். பொதுமக்களுக்கு சுகாதார மான குடிநீரை வழங்கும் வகை யில் அனைத்து மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளையும் 15 தினங் களுக்கு ஒருமுறை சுத்தம் செய் வதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், வேறு நபர்கள் தொட்டி களில் ஏறமுடியாத அளவுக்கு பூட்டுப் போட்டு பாதுகாப்பை உறு திப்படுத்த வேண்டும்.”
இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.