districts

img

பூவற்றக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆழ்துளைக் கிணறு பணியினை அமைச்சர் தொடங்கி வைத்தார்

அறந்தாங்கி, மார்ச் 18 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பூவற்றக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக் கிணறு பணியினை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அறந்தாங்கி ஒன்றியத்துக்கு உட்பட்ட பூவற்றக்குடி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக ஆழ்துளைக் கிணறு பழுதடைந்த நிலையில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தர பொமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இந்நிலையில், அதன் தொடக்கமாக ஆயிரம் அடி ஆழத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். முன்னதாக ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரங்களை  நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சொர்ணராஜ், வட்டாட்சியர் காமராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் காந்தி, கருனாநிதி, மணிமொழியன், மருத்துவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.