districts

img

கவிதை நூல் அறிமுக விழா

புதுக்கோட்டை, மார்ச் 25- கவிஞர் புத்திரசிகாமணி எழுதிய ‘‘புவி யீர்ப்பு விசையை எதிர்த்து’’ எனும் கவிதை  நூல் அறிமுக விழா புதுக்கோட்டை மாவட்  டம் வடகாட்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் கிளைத் தலை வர் எஸ்.டி.பஷீர்அலி தலைமை வகித்தார். கவிஞர்கள் வெள்ளைசாமி, ரமா ராம நாதன், சிவானந்தம் ஆகியோர் கவிதை நூல் குறித்துப் பேசினர். தமிழரசன் பாடல்  பாடினார். முன்னதாக கிளையின் செய லாளர் மு.ராஜா வரவேற்றார். நிர்வாகி பாரதி நன்றி கூறினார்.