districts

img

எதிர்க் கட்சிகளை முடக்குவதுதான் மோடி அரசின் திட்டம்: ப.சிதம்பரம்

புதுக்கோட்டை, மார்ச் 31- எதிர்கட்சிகளை முடக்கி சர்வாதிகார ஆட்சியை கொண்டுவருவதுதான் பாஜக அரசின் திட்டம் என்றார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம். 

காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் ப. சிதம்பரத்தை ஆதரித்து சிவகங்கை தொகு திக்குட்பட்ட ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி  அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசிய தாவது:-

சுதந்திர இந்தியாவில் இதுவரை தொ டர்ந்து தேர்தல்கள் நடைபெற்று வந்து கொண்டிருக்கின்றன.  ஆனால், நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலின் மூலம் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மீண்டும் மக்கள வைத் தேர்தல் மட்டுமல்ல, சட்டப்பேரவைத் தேர்தலும் நடக்காது.

அரசியல் கட்சிகள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்ற விதி உள்ளது. ஆனால், ஏதோ ஒரு பிழையை கண்டுபிடித்த தாகவும், அதற்கான தொகை, வட்டி, அபரா தம் என ரூ.1,821 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இதேபோல,  காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம் உட்பட பல்வேறு செயல் கள் மூலம் காங்கிரஸ் கட்சியையே முடக்க வேண்டும் என்பதுதான் மோடியின் திட்டம். மாநில கட்சிகளை முடக்கும் வகையில் முதல் வர்களை சிறையில் அடைப்பது போன்ற  செயல்களை மோடி அரசு மேற்கொண் டுள்ளது. 

தேசிய கட்சியையும் முடக்கிவிட்டு, மாநில கட்சித் தலைவர்களையும் அச்சுறுத்தி விட்டு நாட்டில் ஒரே கட்சியாக பாஜக மட்டும் இருக்க வேண்டும் என்பதுதான் மோடியின் எண்ணம். அதன் மூலம் ஒரே நாடு, ஒரே தேர்தலை சாத்தியப்படுத்த வேண்டும் என பாஜக முயற்சிக்கிறது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் உயிரோடு இருக்காது. 

கடந்த தேர்தலில் “அனைவரது வங்கிக் கணக்குக்கும் ரூ.15 லட்சம் வரும்.  2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, பெட்ரோல் ரூ.40, டீசல் ரூ.35-ஆக விலை குறைக்கப்படும், காஸ் விலை கட்டுப்படுத்தப்படும், விவசாயி களின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும்” என்றெல்லாம் மோடி வாக்குறுதி அளித்தார். எதையும் செய்யவில்லை. ஆனால், ஒவ் வொருவரின் சேமிப்புத் தொகை குறைந் துள்ளது. விவசாயிகளின் கடன் தொகை அதி கரித்துள்ளது. 

எனவே, ஜனநாயகத்தை காப்பாற்றவும், ஏழை எளியோருக்கு  திட்டங்களை செயல் படுத்திடவே இந்தியா கூட்டணி அமைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில், மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கந்தர்வக் கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை, வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் இராம.சுப்பிரமணியன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலா ளர் த.செங்கோடன் உள்ளிட்டோர் பேசினர்.