districts

img

நார்த்தாமலையில் புதிய கலையரங்கம்: எம்.சின்னதுரை எம்எல்ஏ திறந்து வைத்தார்

புதுக்கோட்டை, பிப். 24-  புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேர வை உறுப்பினர் எம்.சின்னதுரை வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம் அன்ன வாசல் ஊராட்சி ஒன்றியம், நார்த்தாமலை ஊராட்சி, நீலியம்மன் கோவில், ஆதிதிராவிடர் காலனியில், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கலையரங்கம் கட்டப்பட்டது.  இக்கலையரங்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமை யில் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சின்னதுரை வெள்ளிக்கிழமை திறந்து  வைத்தார். நிகழ்ச்சியில், இலுப்பூர் வரு வாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரெ.ஆனந்தன், எம்.பிரேமலதா, சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சலோமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

;