districts

img

புத்தகத் திருவிழாவில் தீக்கதிருக்கு ஆண்டுச் சந்தா செலுத்திய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

புதுக்கோட்டை, ஜூலை 30 - புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் தீக்கதிர் அரங்கிற்கு வந்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆண்டு சந்தா செலுத்தி சந்தாதாரர் ஆனார்.

7 ஆவது புதுக்கோட்டை புத்தகத்திருவிழா புதுக்கோட்டை மன்னர் கல்லூரி விளையாட்டுத் திடலில் நடைபெற்று வருகிறது. 

புத்தகத் திருவிழாவில் சிறப்புரையாற்றுவதற்காக தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை வருகை தந்தார். 

அப்போது புத்தகத் திருவிழா அரங்குகளைப் பார்வையிட்டு வந்த அமைச்சர் மெய்யநாதன் தீக்கதிர் அரங்கத்திற்கும் வந்தார். தீக்கதிர் பணிகளைப் பாராட்டிய அமைச்சர் ரூ.2000 செலுத்தி தீக்கதிர் நாளிதழின் சந்தாதாரராக தன்னை இணைத்துக் கொண்டார்.  

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் கி.ஜெயபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.