புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சிப் பகுதியில் ரூ. 30.52 கோடியில் புதிய குடிநீர்த் திட்டப் பணிகளை மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்வில் ஆட்சியா் கவிதா ராமு, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன், நகர் மன்றத் தலைவர் ஆனந்த், துணைத் தலைவர் முத்து சுப்பிரமணியன், ஆணையர் லீணா சைமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.