புதுக்கோட்டை, நவ.24- புதுக்கோட்டை மாவட்டத் தில் அரசின் சார்பில் செயல்படுத் தப்படும் திட்டங்கள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக் குக்குழு தலைவர் கு.செல்வப் பெருந்தகை மற்றும் உறுப்பி னர்கள் புதனன்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டனர். புதுக்கோட்டை நகராட்சி, மாலையீடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகர்ப்புற நல வாழ்வு மையம், புல்வயல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குடுமி யான்மலை அரசு தோட்டக்கலைப் பண்ணை ஆகியவற்றை பார்வை யிட்டனர். புதுக்கோட்டையில் செயல் பட்டு வரும் ஆதிதிராவிடர் நலன் அரசு கல்லூரி மாணவர் விடுதி, ஆதிதிராவிடர் நலன் அரசு கல்லூரி மாணவியர் விடுதி, பிற்படுத்தப் பட்டோர் நலன் அரசு கல்லூரி மாண வர் விடுதி ஆகிய 3 விடுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுகள் நடத்தினர். பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசின் சார்பில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதி செலவினம் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழு தலைவர் கு.செல் வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச் சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்றார். ஆய்வுகளின்போது, வேட சந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். காந்திராஜன், மொடக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனை செல்வன், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம், திரு வாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன், திருத்துறைப் பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கே. மாரிமுத்து, பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் கு.மரகதம் குமரவேல், சார்பு செய லாளர் ஜெ.பாலசீனிவாசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வரு வாய் அலுவலர் மா.செல்வி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.