சென்னை, நவ.15- தமிழ்நாட்டில் இரண்டா வதாக புதுக்கோட்டை யில் கட்டப்பட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதனன்று (நவ.15) காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் சென்னை யில் மட்டும் அரசு பல் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. சில ஆண்டு களுக்கு முன் சிதம்பரம் அண்ணாமலையார் பல்கலைக்கழக வளா கத்தில் இயங்கி வந்த பல் மருத்துவக் கல்லூரியை அரசு கையகப்படுத்தியது.
இந்நிலையில் தென் மாவட்ட மக்கள் பயன் பெறும் வகையில் புதுக் கோட்டையில் அரசு பல் மருத்துவ கல்லூரி அமைக்க கடந்த 28.10.2021 அன்று ரூ.63 கோடியே 41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்தன.
இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல் வர் திறந்து வைத்தார். இதையொட்டி புதுக் கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ரகு பதி, மெய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் சிலை
தூத்துக்குடி மாநகர மக்களின் தந்தை என்று அன்போடு அழைக்கப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந் தீஸ்-க்கு நினைவு மணி மண்டபம் கட்டப்படும் என்று தேர்தல் அறிக்கை யில் அறிவித்த அதற்கிணங்க, தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத் துடன் கூடிய முழு உருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் 13.11.2021 அன்று அறிவிக்கப் பட்டது. பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் ரூ. 77 லட்சத்து 87 ஆயிரம் செலவில் சிலை நிறுவப் பட்டது.
இந்நிகழ்ச்சியில் தலை மைச் செயலகத்திலிருந்து, அமைச்சர் சுவாமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மருத்துவர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன், ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியிலிருந்து காணொலிக் காட்சி வாயி லாக அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், மக்களவை உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பதி, ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் கொள்ளு பேத்தி ராமோலா வாஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.